×

வல்லூர் அனல் மின் நிலையத்தில் 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

சென்னை: வல்லூர் அனல் மின் நிலையத்தில் கொதிகலன் கசிவு காரணமாக 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் உள்ள வல்லூர் தேசிய அனல் மின் கழகமும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமும் இணைந்து, வல்லூர் அனல் மின் நிலையத்தை இயக்கி வருகிறது.

இதன், மூன்று அலகுகளில் தலா 500 மெகாவாட் என 1,500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், 1வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அதை சரி செய்யும் பணியில் மின் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.



Tags : Vallur , 500 MW power generation affected at Vallur thermal power station
× RELATED வல்லூர் அனல் மின்நிலைய தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்