×

குழந்தை கடத்தல்: 2 பெண்களுக்கு 3 ஆண்டு சிறை

சென்னை: சென்னை ஈவிஆர் சாலை, மெமோரியல் ஹால், பிளாட்பாரம் பகுதியில் கடந்த 2017ம் ஆண்டு 10 மாத குழந்தை கடத்தப்பட்டது. இதுதொடர்பாக, பூக்கடை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, எழில்நகரை சேர்ந்த சபியா (40) மற்றும் வனிதா (30) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில், நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், குழந்தை கடத்தல் விவகாரத்தில் சபியா, வனிதா ஆகிய இருவர் மீதும் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ1000 அபராதமும் விதிக்கப்பட்டது.

Tags : Child trafficking: 2 women jailed for 3 years
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...