×

பாஜக தலைகீழாக நின்றாலும் தமிழக மக்களின் அனுதாபத்தை பெற முடியாது: புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேச்சு

புதுச்சேரி: பாஜக ஆளும் மாநிலங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துதான் வருகின்றது என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். கோவை கார்வெடி விபத்து சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த சமத்துவம் தொடர்பாக பாஜக தரப்பில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, தமிழகத்தில் கோவையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் துரதிஷ்டவசமானது.

துரிதமாக செயல்பட்ட தமிழ்நாடு அரசிற்கு பாராட்டுக்கள். ஆனால் பாஜக இதை அரசியலாக்குகின்றது. பாஜக ஆளும் மாநிலங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துதான் வருகின்றது; பாஜக தலைகீழாக நின்றாலும் தமிழக மக்களின் அனுதாபத்தை பெற முடியாது. பாஜக-வின் சந்தர்ப்பவாத அரசியலை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்; அண்ணாமலை, பத்திரிக்கையாளர்களை தரக்குறைவாக பேசியது கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார்.

Tags : BJP ,Tamil Nadu ,Former ,Puducherry ,Chief Minister ,Narayanasamy , BJP can't win Tamil Nadu people's sympathy even if it stands upside down: Former Puducherry Chief Minister Narayanasamy Speech
× RELATED வாயால் வடை சுட்டு தமிழ்நாட்டின்...