×

நாளை பசும்பொன்னில் நடைபெறவுள்ள முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்துகொள்ளமாட்டார் என அறிவிப்பு

சென்னை: நாளை பசும்பொன்னில் நடைபெறவுள்ள முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்துகொள்ளமாட்டார் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115-வது குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்திற்கு நாளை பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். இதற்காக சென்னையில் இருந்து இன்று விமானம் மூலம் மதுரை செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், நேற்று இரவு அவருக்கு முதுகு வலி ஏற்பட்டதை தொடர்ந்து, சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்தார்.

அவருக்கு டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். அதன்பின்னர், அவர் வீடு திரும்பினார். முதுகுவலி ஏற்பட்டுள்ளதால் நீண்ட தூர பயணங்களை தவிர்க்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.  முதல்வர் மு.க.ஸ்டாலின் பசும்பொன் கிராமம் செல்வதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம் ரத்து செய்யப்பட்ட நிலையில், மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி உள்ளிட்டவர்கள் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவில் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், சென்னையில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு நாளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Chief President ,Muthuramalingat ,Devar Gurubuja ,Bazumpon ,Khstalin , Announcement that Chief Minister M.K. Stalin will not attend the Muthuramalingath Devar Gurupuja to be held in Pasumbon tomorrow.
× RELATED பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்...