×

விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு ஒன்றிய அரசை கண்டித்து நவ.1ம் தேதி ஆர்ப்பாட்டம்

சென்னை: ஒன்றிய பாஜ அரசின் போக்கை கண்டித்து நவம்பர் 1ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையில் கூறியிருப்பதாவது: மொழி உணர்வுகளை நசுக்குவதிலும் மாநில உரிமைகளைப் பறிப்பதிலும் ஒன்றிய அரசு மறைமுகமாகவோ வெளிப்படையாகவோ செயல்படுவதை தொடர் வாடிக்கையாகக் கொண்டுள்ளது. அதன்படியே தற்போது பாஜ அரசும்  மாநில உரிமைகளைப் பறிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. இதனால் தமிழ்நாடு மாநிலமும் பல்வேறு வகைகளில் பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் ஒன்றிய பாஜ அரசைக் கண்டித்து, மொழிவழி தேசிய உரிமை நாளான  நவம்பர் 1ம் தேதி சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்திய கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூடு, இந்தி திணிப்பு மற்றும் மாநில உரிமைகள் பறிப்பு ஆகியவற்றை கண்டித்து நடக்கிறது. ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டின் மொழி உரிமை உள்ளிட்ட மாநில உரிமைகள் மீது அக்கறையுள்ள அனைவரும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : Liberation Tigers ,Party ,Announcement ,Union Government , Liberation Tigers Party Announcement Demonstration on November 1 to condemn the Union Government
× RELATED ஆளுநர் பதவி ஒழிப்பு, வாக்கு சீட்டு...