×

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன்னில் அவரது நினைவிடத்தில் 30ம் தேதி மரியாதை செலுத்துகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன்னில் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்; பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் 115-ஆவது பிறந்தநாள் விழா மற்றும் 60-ஆவது குருபூஜை விழாவை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், பசும்பொன் கிராமத்தில் உள்ள அன்னாரது நினைவிடத்தில் முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் வருகின்ற 30.10.2022 அன்று தமிழ்நாடு அரசு சார்பில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்த உள்ளார்கள்.

முதலமைச்சர் 30.10.2022 அன்று காலை பசும்பொன் வருகை தரவுள்ளதால் 29.10.2022 மற்றும் 30.10.2022 ஆகிய இரண்டு நாட்களில் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறப்பதற்கு அப்பகுதியில் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


Tags : Devar Jayanthi ,Pazumpon ,BSE. ,K. Stalin , On the occasion of Devar Jayanti, Chief Minister M. K. Stalin will pay respects at his memorial in Pasumpon on 30th..!
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...