×

கோவையில் பாஜக சார்பில் அக்.31-ல் நடைபெறும் பந்த்-க்கு ஆதரவு தரமாட்டோம்: வணிகர் சங்க பேரமைப்பு அறிவிப்பு

கோவை: கோவையில் பாஜக சார்பில் நடைபெறும் பந்த்-க்கு ஆதரவு தரமாட்டோம் என வணிகர் சங்க பேரமைப்பு தெரிவித்துள்ளது. அக்டோபர் 31-ல் நடைபெறும் பந்த்-ல் வணிகர்கள் கலந்து கொள்ளப்போவதில்லை என வணிகர் சங்க பேரவை அறிவித்துள்ளது. வணிகர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு வழங்க வேண்டும் என காவல் ஆணையரிடம் வணிகர் சங்க பேரமைப்பு  மனு தாக்கல் செய்துள்ளது.

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு பிரச்சனையை முன்வைத்து அக்டோபர் 31-ம் தேதி பாஜக சார்பில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விசாரணையை என்.ஐ.ஏ. மேற்கொண்டுள்ள நிலையில் பந்த்துக்கு அவசியமில்லை என்று பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாஜக அழைப்பு விடுத்துள்ள பந்த் சட்டவிரோதம் என அறிவிப்பதுடன் தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்திலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அக்டோபர் 31-ல் நடைபெறும் பந்த்-ல் வணிகர்கள் கலந்து கொள்ளப்போவதில்லை என வணிகர் சங்க பேரவை அறிவித்துள்ளது.

கடைகளை அடைத்து பந்த்-க்கு ஆதரவு தர வேண்டும் என்று வியாபாரிகளை பாஜகவினர் கட்டாயப்படுத்துவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் வணிகர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு வழங்க வேண்டும் என காவல் ஆணையரிடம் வணிகர் சங்க பேரமைப்பு மனு கொடுத்துள்ளது.


Tags : Bajaka ,Merchants Association , Coimbatore, BJP, We will not support bandh, Businessmen's Sangh Federation announcement
× RELATED முன்னாள் ஒன்றிய அமைச்சரும், மூத்த...