கோவை: கோவையில் பா.ஜ.க. மேற்கொள்ள உள்ள பந்த் சட்டவிரோதம் என்று அறிவிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு போடப்பட்டது. கோவையை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் அளித்தார். வி.ஆர்.வெங்கடேஷ் மனு பிற்பகலில் விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், பரத சக்கரவர்த்தி அறிவித்தனர்.