நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக உதகையில் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் ஆஜர் படுத்தினர். வழக்கை தனிப்படை போலீசார் விசாரித்து வந்த நிலையில் கடந்த மாதம் சிபிசிஐடி விசாரணைக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார். விசாரணையை தொடங்க சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவினர் நேற்று முன்தினம் கோடநாடு சென்றனர்.