×

கஞ்சா வியாபாரி கொலை வழக்கில் 9 பேர் சரண்

ஆலந்தூர்: மணிமங்கலம் கஞ்சா வியாபாரி கொலை வழக்கில் ஆலந்தூர் கோர்ட்டில் 9 பேர் சரணடைந்தனர். தாம்பரம் அடுத்த படப்பை பகுதியை சேர்ந்தவர் முரளி (23), கஞ்சா வியாபாரி. இவரை கடந்த 23ம் தேதி இரவு ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது. இதுகுறித்து மணிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அப்போது சாலமங்கலம் பகுதியை சேர்ந்த பூபதி முன்விரோதம் காரணமாக தனது நண்பர்களுடன் சேர்ந்து முரளியை கொலை செய்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக, பூபதி உள்பட 9 பேரை மணிமங்கலம் போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் ஆலந்தூர் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி வைஷ்ணவி முன்பு சாலமங்கலம் பூபதி (20), சொரப்பனஞ்சேரி வாசு (22), அனகாபுத்தூர் ஜெகதீசன் (19), குண்டு பெருமேடு ஜெயசூர்யா (22), படப்பை தினேஷ் (24), சாலமன் தேவகுமார் (22), நித்திஷ் (19), விக்னேஷ் குமார் (21), ஐயப்பன் (19) ஆகிய 9 பேர் நேற்று சரணடைந்தனர். அவர்களை வருகிற 31ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 9 பேரையும் பரங்கிமலை போலீசார் சிறையில் அடைத்தனர்.

Tags : Saran , 9 people surrendered in the case of murder of ganja dealer
× RELATED ஜாமீன் மனு தள்ளுபடி திகார் சிறையில் டெல்லி மாஜி அமைச்சர் சரண்