சென்னை: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நேற்று வெளியிட்ட அறிக்கை: கோவையில் நடந்த கண்டிக்கத்தக்க வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது துரித நடவடிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். எதையும் அரசியலாக்கிக் குளிர்காய பாஜ திட்டமிடுகிறது. இந்த விஷயத்தில், முதல்வர் சிறிதும் தாமதிக்காமல், இந்த விசாரணையை தேசிய புலனாய்வு முகமைக்கு ஒப்படைக்க ஆணையிட்டுள்ளார். இதை பாஜ தலைவர் அண்ணாமலையும் கூட வரவேற்றுள்ளார்.