×

காளையார்கோவிலில் மருதுபாண்டியர்கள் 221வது குருபூஜை விழா

காளையார்கோவில்: சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் 221வது குருபூஜை விழா நேற்று நடைபெற்றது. நினைவு மண்டபத்தில் திமுக சார்பில் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ, முன்னாள் எம்பி பவானி ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம், அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலும், முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் தலைமையிலும் தனித்தனியே மரியாதை செலுத்தினர். பாஜ மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும், சமுதாய தலைவர்களும், பொதுமக்களும் பங்கேற்று மரியாதை செலுத்தினர். 


Tags : 221st Guru Pooja Festival of Marutubandiyas ,Kalaiyar Temple , 221st Guru Pooja Festival of Marutubandiyas at Kalaiyar Temple
× RELATED காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட 6...