×

கடவுள் அவதாரம் மோடி விரும்பும் வரை அவர்தான் பிரதமர்: உபி அமைச்சர் பேச்சு

சம்பல்: ‘பிரதமர் மோடி கடவுளின் அவதாரம் போன்றவர். அவர் விரும்பும் வரை அவர் தான் பிரதமராக நீடிப்பார்’ என உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பெண் அமைச்சர் குலாப் தேவி பேசி உள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் சாந்தாசி தொகுதி எம்எல்ஏவும், அமைச்சருமான குலாப் தேவி சம்பல் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று அளித்த பேட்டியில், ‘‘பிரதமர் மோடி கடவுளின் அவதாரம். மிக அற்புதமான திறமைசாலி அவர். அவருடன் யாரும் போட்டி போட முடியாது. வாழும் வரை மோடி தான் பிரதமராக இருப்பார். சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த ஒருவர் பிரதமர் ஆக வேண்டுமென எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. அப்படிப்பட்ட யூகங்கள் எல்லாம் நடக்கவே நடக்காது. கடவுளே தனது பிரதிநிதியாக பிரதமர் மோடியை அனுப்பி வைத்துள்ளார். அவரது விருப்பங்களை மக்கள் செய்கிறார்கள். அவர் வார்த்தைகளை இந்த நாடே பின்பற்றி நடக்கிறது. இதை விட பெரிய அங்கீகாரம் எதுவாக இருக்க முடியும்’’ என்றார்.

Tags : God ,Modi ,UP , God Incarnate Modi Will Be Prime Minister As Long As He Wills: UP Minister Speech
× RELATED தேவ ரகசியத்தை உடைக்கலாமா? : ஜோதிட ரகசியங்கள்