×

மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்: ராமதாஸ் கருத்து

சென்னை: தமிழகத்தில் தீபாவளி பண்டிககைக்கு ரூ.259 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டிருப்பது சாதனையல்ல என்று ராமதாஸ் கூறியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:  தமிழ்நாட்டில் தீப ஒளி திருநாளுக்கு முந்தைய நாளான்று ஒரே நாளில் ரூ.259 கோடிக்கு மது விற்பனையாகியிருக்கிறது. இரு நாட்களில் மதுவுக்காக செலவிடப்பட்ட சுமார் ரூ.600 கோடி, ஆக்கப்பூர்வமாக செலவிடப்பட்டிருந்தால், லட்சக்கணக்கான ஏழைக் குடும்பங்களின் குழந்தைகளுக்கு புத்தாடைகளும், இனிப்புகளும் கிடைத்திருக்கும். லட்சக்கணக்கான குடும்பங்களின் மகிழ்ச்சியை மது பறித்திருப்பது வேதனையானது. தீப ஒளி, பொங்கல் போன்ற திருவிழாக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட வேண்டுமானால் அந்த காலத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும். அடுத்தக்கட்டமாக தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகளை நிரந்தரமாக மூடி மது விலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்.


Tags : Ramadas , Prohibition should be enforced: Ramadoss
× RELATED வணிகர்கள் அவதிப்படுவதால்...