சென்னை: பட்டியல் சமூகத்தவரை ஹரிஜன் என குறிப்பிட்டதற்கு ஆளுநர் உரிய விளக்கமளிக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது அறிக்கை: அக். 17ம் தேதி சென்னையில் எஸ்.ஆர்.எஸ் சர்வோதயா பள்ளியின் மாணவியர் விடுதியைத் திறந்துவைத்து ஆளுநர் உரையாற்றினார். தமிழ்நாட்டில் உள்ள பட்டியல் சமூகத்தவரை ‘ஹரிஜன்’ எனக் குறிப்பிட்டுப் ஆளுநர் பேசியிருக்கிறார். இது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. ஒன்றிய அரசு பல சுற்றறிக்கைவெளியிட்ட பின்னரும் அந்த அரசின் பிரதிநிதியாக இருக்கும் ஆளுநர் இவ்வாறு பொது வெளியில் அதுவும் மாணவர்களிடையே அந்த சொல்லைப் பயன்படுத்திப் பேசியிருப்பது சரியானதுதானா. அவரைப் பின்பற்றி வேறு யாரும் அந்தச் சொல்லைப் பயன்படுத்தாமல் இருக்க அவர் விளக்கம் அளிக்க வேண்டும்.