சென்னை: சென்னையில் அக்டோபர் 23, 24, 25 ஆகிய தேதிகளில் 211 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டன. 50 மெட்ரிக் டன் குப்பை கும்மிடிபூண்டியில் உள்ள அபாயகரமான கழிவுகள் சேகரிக்கும் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மீதமுள்ள கழிவுகள் நாளை கும்மிடிப்பூண்டிக்கு கொண்டு செல்லப்பட உள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்தது.
