×

வான்வழி தாக்குதலின் போது மியான்மரில் 80 பேர் பலி

பாங்காக்: மியான்மர் நாட்டின் கச்சின் மாநிலத்தில் அங் சங் சூ தலைமையிலான அரசு ஆட்சி நடத்தி வந்த நிலையில், கடந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தற்போது ராணுவ கட்டுப்பாட்டில் ஆட்சி நிர்வாகம் உள்ளது. இந்நிலையில் மியான்மரின் கச்சின் மாநிலத்தில் கச்சின் இன சிறுபான்மையினரின் முக்கிய அரசியல் அமைப்பின் ஆண்டு விழா நடைபெற்றது. அப்போது மியான்மர் ராணுவம் சார்பில் திடீர் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த திடீர் தாக்குதலில் இதுவரை 80க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பாடகர்கள், இசைக்கலைஞர்கள், பொது மக்கள் என பல்வேறு தரப்பினரும் பலியாகினர்.

100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ராணுவ ஆட்சி நடைமுறைக்கு வந்து பிறகு நடைபெற்ற பெரிய மற்றும் முதல் வான் தாக்குதலாக இந்த தாக்குதல் கருதப்படுகிறது. மியான்மரின் அட்டூழியங்கள் குறித்து விரிவான ஆலோசனை நடத்துவதற்கான கூட்டம் தென்கிழக்கு ஆசிய வெளிநாட்டு அமைச்சர்கள் சார்பில் நடைபெற இருந்தது. இந்த நிலையில் இந்த கோர தாக்குதல் அரங்கேறி உள்ளதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.


Tags : Myanmar , 80 killed in Myanmar airstrike
× RELATED ஆங் சான் சூகி வீட்டு சிறைக்கு மாற்றம்