×

ஓட்டலின் 2வது மாடியில் இருந்து விழுந்து போலீஸ் கஸ்டடியில் போதைப்பொருள் வியாபாரி சாவு: அரியானாவில் அதிர்ச்சி

பிஜ்னூர்: உத்தரபிரதேச மாநிலம் நஜிபாபாத் அடுத்த செவரம் மொஹல்லா பகுதியை சேர்ந்த போதை பொருள் வியாபாரி சஞ்சீவ் குமார் என்பவரை அரியானா மாநிலம் பஞ்ச்குலா போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். இந்த நிலையில் பஞ்ச்குலாவில் போலீஸ் காவலில் இருந்த போது, சஞ்சீவ் குமார் மர்மான முறையில் இறந்தார். இதுகுறித்து பிஜ்னூர் போலீஸ் கஜேந்திர சிங் கூறுகையில், ‘அரியானா போலீசார் சஞ்சீவ் குமாரை பஞ்ச்குலா அழைத்து சென்றனர். பிஜ்னூரில் உள்ள ஓட்டலில் அவரை தங்க வைத்தனர்.

போலீஸ் பிடியில் இருந்து தப்பிப்பதற்காக, ஓட்டலின் இரண்டாவது மாடியின் ஜன்னல் வழியாக சஞ்சீவ் குமார் கீழே குதித்தார். படுகாயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தோம். ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்தார்’ என்றார். ஆனால் சஞ்சீவ் குமாரின் சகோதரர் பவன் கூறுகையில், ‘பஞ்சகுலா போலீசாரின் சித்ரவதையால், எனது சகோதரர் கொல்லப்பட்டார். எனவே சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : Sawu ,Ariana , Drug peddler dies in police custody after falling from 2nd floor of hotel: Shock in Ariana
× RELATED காஷ்மீர், இமாச்சல், பஞ்சாப், அரியானா...