சென்னை: பட்டாசு தீ விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பட்டாசு தீ விபத்தில் ஏற்படும் காயங்களுக்கு சிகிச்சை தர தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. பட்டாசு வெடி விபத்தில் தீக்காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒரு சிலருக்கு மட்டுமே 17 சதவீத அளவுக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.