மதுரை: மதுரை பழங்காநத்தத்தில் தலைதீபாவளி கொண்டாடிய பெண் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த வாரம் காதல் திருமணம் செய்த நிலையில் இன்று தலைதீபாவளி கொண்டாடிய பெண்ணை எரிக்க முயற்சி செய்துள்ளனர். காதல் திருமணத்துக்கு சித்தப்பா எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் எரிக்க முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.