×

வருகிற 5ம் தேதி உதவி இயக்குனர் பதவிக்கான தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறையில் உதவி இயக்குனர் பதவிக்கான தேர்வு வருகிற 5ம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா வெளியிட்ட அறிவிப்பு: சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் அடங்கிய உதவி இயக்குனர்(பெண்கள் மட்டும்) பதவிக்கான எழுத்து தேர்வு(கணினி வழி தேர்வு) வருகிற 5ம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகல் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய 7 மாவட்ட தேர்வு மையங்களில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த கணினி வழி தேர்வு நிர்வாக காரணங்களால் தற்பொழுது சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய 4 மாவட்ட தேர்வு மையங்களில் தேர்வு நாளன்று நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : DNBSC , 5th, Examination for the post of Assistant Director. TNPSC Notification
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியீடு