ஆலந்தூர்: சென்னை மின்சார ரயில்களில் கல்லூரி மாணவர்கள் அடிக்கடி யார் ரூட் தல என்ற பிரச்னையில் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரு கல்லூரி மாணவர்கள் இடையே கிண்டி ரயில் நிலையத்தில் யார் ரூட் தல என்ற பிரச்னை ஏற்பட்டது. தகவலறிந்து, கிண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பச்சையப்பன் கல்லூரி மாணவர்ககள் 15 பேரையும், நந்தனம் கலைக் கல்லூரி மாணவர்கள் 6 பேரையும் பிடித்தனர். அவர்களிடம் இனிமேல் ரூட் தல விவகாரமாக பிரச்னை செய்ய மாட்டோம் என எழுதி வாங்கிக்கொண்டு எச்சரித்து அனுப்பினர். மேலும், மோதலில் ஈடுபட்ட மாணவர்களின் பெயர் பட்டியலை இரு தரப்பு கல்லூரி நிர்வாகத்திற்கும் அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்குமாறு கடிதம் மூலம் கேட்டுக் கொண்டுள்ளனர்.