தேனி: தொடர் மழை காரணமாக வைகை அணை, அதன் வரலாற்றிலேயே ஆறாவது முறையாக நிரம்பியுள்ளது. 71 அடி நீர்மட்டம் கொண்ட வைகை அணை அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.