சென்னை: சென்னை சமூக பாதுகாப்பு திட்ட அதிகாரி வளர்மதி வீட்டில் ரூ.49 லட்சம், 60 சவரனை ஏமாற்றி அபகரித்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி வில்லிவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேஷ்குமார் என்பவரை கைது செய்தனர். சமூக பாதுகாப்பு திட்ட அதிகாரி வளர்மதியின் பினாமியாக கணேஷ்குமார் செயல்பட்டதாக விசாரணையில் அம்பலமாகியுள்ளது. மோசடி நடந்தது எப்படி? என கணேஷ்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.