×

முதலமைச்சரின் 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளுக்கு கணினித் தமிழ் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

சென்னை: தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கேற்ப உலகமெல்லாம் கணினி வழித் தமிழ் மொழி பரவச் செய்யும் வகையில் கணினித் தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக முதலமைச்சர் கணினித் தமிழ் விருது என்ற பெயரில் விருது வழங்கப்பட்டு வருகிறது.

விருது பெறுபவருக்கு விருதுத் தொகையாக ரூபாய் 2 இலட்சம். ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படுகிறது. அவ்வகையில் 2021-ம் ஆண்டுக்குரிய முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுக்கு மென்பொருள்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலனையில் உள்ளது. மேலும் 2021-ம் ஆண்டுக்கு கூடுதல் விண்ணப்பங்களும், 2022-ம் ஆண்டுக்கு தனியர் மற்றும் நிறுவனத்திடமிருந்து தமிழ் வளர்ச்சிக்கான மென்பொருள்கள் விண்ணப்பங்களும் வரவேற்கப்படுகின்றன.

விருதுக்கு அனுப்பப்படவுள்ள மென்பொருள்கள் 2018, 2019, 2020 2021 ஆம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும். இவ்விருதுக்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளைத் தமிழ் வளர்ச்சித்துறையின் வலைத் தளத்தில் (www.tamilvalarchithurai.com) இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர். விருதுக்கான விண்ணப்பம் தமிழ் வளர்ச்சி இயக்ககத்திற்கு வந்து சேர வேண்டிய இறுதி நாள் 31.12.2022 ஆகும்.

மேலும் விவரங்களுக்கு 044-28190412 044-28190413 tvt budget@gmail.com  தொடர்புக்கான தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரி, பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளனர். விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி வளாகம் முதல் தளம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை 600 008 என்ற முகவரியில் 31.12.2022 க்குள் அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.


Tags : Applications are invited for Chief Minister's Computer Tamil Award for the years 2021 and 2022
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...