×

நவ.1ல் நடைபெறும் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தலைமை ஆசிரியர் கலந்துகொள்ள வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை: உள்ளாட்சி தினமான நவ.1ல் நடைபெறும் சிறப்பு கிராம சபை கூட்டத்தில், தலைமை ஆசிரியர் கலந்துகொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு தலைவரும் கலந்துகொள்ள வேண்டும். பள்ளியின் வளர்ச்சிக்கான கற்றல் கற்பித்தல், பள்ளி மேம்பாடு சார்ந்த தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருக்கிறது.

Tags : Chief Teacher ,Special Grama Sabha , Gram Sabha Meeting, Head Teacher, School Education Department
× RELATED பக்தர்கள் பூவோடு எடுத்து வழிபாடு...