×

டெல்டாவில் விடிய விடிய பலத்த மழை: மின்னல் தாக்கி 2 பெண்கள் பலி

திருச்சி: திருவாரூரில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. புதுக்கோட்டையில் ேநற்றிரவு 7 மணிக்கு பலத்த மழை பெய்தது. கரூர், அரியலூர், பெரம்பலூரில் நேற்று இரவு விட்டு விட்டு மழை பெய்தது. அதேபோல், திருச்சியில் நேற்று மாலை 6.30 மணி முதல் விட்டு விட்டு மழை பெய்தது.

மின்னல் தாக்கி பெண்கள் பலி: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே மனப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மனைவி கோகிலா(42). இவர் நேற்று மாலை தனக்கு சொந்தமான பசு மாட்டை மேய்த்த போது மின்னல் தாக்கி அந்த இடத்திலேயே இறந்தார். மாடும் செத்தது.

இதேபோல் தஞ்சை அய்யம்பேட்டை அருகே மாத்தூர் செட்டித்தோப்பை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(55). விவசாயி. நேற்று இவருக்கு சொந்தமான வயலில் 21 பெண் விவசாய கூலி தொழிலாளர்கள் நடவு பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று மாலை அந்த பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் வயலில் நடவு பணியில் ஈடுபட்டிருந்த சாரதாம்பாள்(52)  உயிரிழந்தார்.

Tags : Delta , Heavy rains in Delta at dawn: 2 women killed in lightning strike
× RELATED I.N.D.I.A. கூட்டணிக்கு டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த 16 விவசாய அமைப்புகள் ஆதரவு..!!