×

சிவகங்கையில் 108 ஆம்புலன்ஸ் வாகனம் மரத்தில் மோதி கருவுற்ற பெண் உட்பட 2 பேர் உயிரிழப்பு

சிவகங்கை: சிவகங்கையில் 108 ஆம்புலன்ஸ் வாகனம் மரத்தில் மோதி கருவுற்ற பெண் உட்பட 2 பேர் உயிரிழந்தனர். சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே நேஞ்சத்தூர் கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணியான நிவேதாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது இளையான்குடி சிவகங்கை சாலையில் செங்குளம் என்ற இடத்தில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குளானது. இதில் கர்ப்பிணி நிவேதாவும், அவரது தாய் விஜயலட்சுமியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆம்புலன்ஸ் ஓட்டுனரும், செவிலியரும் காயமடைந்தனர். 


Tags : Sivaganga , Sivagangai, Ambulance, Moti, Pregnant, Female, Casualty
× RELATED சிவகங்கை: பாஜக கூட்டணி வேட்பாளர்...