ஈரோடு: ஈரோடு தொட்டிபாளையம் அருகே கரட்டிப்பாளையம் ஏரி உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழை நீருடன், கீழ்பவானி கசிவு நீரும் சேர்ந்து ஏரிக்கு வந்த அதிக உபரி நீரால் உடைப்பு ஏற்பட்டுள்ளது. ஏரியில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் அருகில் உள்ள விளை நிலங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது.