பீளமேடு: பாமக தலைவர் அன்புமணி நேற்று கோவையில் அளிதத பேட்டி: தமிழகத்தில் போதை பழக்கம் அதிகமாகி வருகிறது. இதை தடுப்பதில் முதல்வர் தனி கவனம் செலுத்தி வருகிறார். போதை ஒழிப்பு பிரிவில் போதுமான போலீசாரை நியமித்து போதை பழக்கத்தை அறவே ஒழிக்க வேண்டும். ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி அறிக்கையில் தொழில்நுட்ப ரீதியில் ஏதும் சொல்லப்படவில்லை. இதை வைத்து அரசியல் பண்ணலாம். தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும். 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உள்பட பல்வேறு பரிந்துரைகள் சொல்லப்பட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளவற்றை போலீசார் பாடமாக கொண்டு செயல்பட வேண்டும். மனித உயிர்களை எடுப்பது என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல. சட்டசபையில் அதிமுகவின் இருக்கை பிரச்னை கட்சி சார்ந்த பிரச்னை. மேலும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை வைத்து அதன் அடிப்படையில் சபாநாயகர் நடுநிலையோடு செயல்பட வேண்டும். இவ்வாறு அன்புமணி கூறினார்.