×

மிசோரம்- அசாம் 3வது கட்ட பேச்சு

அய்சால்: வடகிழக்கு மாநிலங்களான மிசோரம், அசாம் இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்னை நீடித்து வருகிறது. எல்லைப் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காண்பதற்கு ஒன்றிய அரசு நேரடியாக நடவடிக்கை எடுத்தது. இதன்படி, இந்த மாநில முதல்வர்கள் மட்டத்தில் ஏற்கனவே 2 கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில், மூன்றாவது கட்டமாக வரும் நவம்பர் 4ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக இம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் இருமாநில அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.


Tags : Mizoram ,Assam , Mizoram- Assam 3rd phase talks
× RELATED மே.வங்கம், அசாமில் சூறைக்காற்றுக்கு 9 பேர் பலி