சென்னை: பிரபல நடிகை பார்வதி நாயர் வீட்டில் இருந்து ரூ.9 லட்சம் மதிப்புள்ள வைரம் பதித்த விலை உயர்ந்த 2 வாட்ச் மற்றும் செல்போன், லேப்டாப் திருடி சென்ற வேலைக்காரனை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் கேரளாவை சேர்ந்த பிரபல நடிகை பார்வதி வசித்து வருகிறார். ‘என்னை அறிந்தால், நிமிர்ந்து நில்’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் நேற்று இரவு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்று அளித்தார்.
அந்த புகாரில், எங்கள் வீட்டில் பீரோவில் வைத்திருந்த ரூ.6 லட்சம் மதிப்புள்ள வைர கற்கள் பதித்த வாட்ச், ரூ.3 லட்சம் மதிப்புள்ள மற்றொரு வாட்ச், ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப் மற்றும் செல்போன், விலை உயர்ந்த பொருட்கள் மாயமாகியுள்ளது. அதேநேரம் எங்கள் வீட்டில் கடந்த 2 ஆண்டுகளாக வீட்டு வேலை செய்து வந்த நபர் திடீரென மாயமாகியுள்ளனார். எனவே திருடுபோன பொருட்கள் வெளியாட்கள் வந்து எடுத்து செல்ல வாய்ப்பு இல்லை.
இதனால் வேலைக்கார நபர் தான் திருடி சென்ற இருக்கலாம் என்று சந்தேகம் உள்ளது. எனவே திருடி சென்ற விலை உயர்ந்த பொருட்கள் மீட்டு தர வேண்டும் என்று புகார் அளித்தார். அந்த புகாரின் படி போலீசார் நடிகை பார்வதி நாயர் வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். மேலும், வீட்டின் அருகே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சந்தேகத்தின் அடிப்படையில் தலைமறைவாக உள்ள நடிகை வீட்டில் வேலை ெசய்து வந்த நபரை போலீசார் ேதடி வருகின்றனர்.