×

போக்குவரத்து கழகத்தை சேர்ந்தவர்கள் பயன்பெறும் வகையில் ஓட்டுநர் கையேட்டை வெளியிட்டார் அமைச்சர் சிவசங்கர்

சென்னை: அனைத்து போக்குவரத்துக் கழகங்களின் ஓட்டுநர்கள் பயன்பெறும் வகையில் ‘ஓட்டுநர் கையேட்டை’போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் வெளியிட்டார். சென்னை, தலைமைச்செயலகத்தில் அனைத்து போக்குவரத்துக்கழகங்களின் ஓட்டுநர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் மற்றும்  சாலை போக்குவரத்து நிறுவனம்  இணைந்து தயாரித்துள்ள ‘ஓட்டுநர் கையேட்டை’ போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் வெளியிட்டு 10 பிரதிகளை ஓட்டுநர்களுக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அரசு முதன்மை செயலர் கே.கோபால் மற்றும் துறை உயர் அலுவலர்கள் பங்கேற்றனர். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 20ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகளை சராசரியாக 80 லட்சம் கி.மீ இயக்குவதன் மூலமாக 1.40 கோடி மக்கள் பயன் பெறுகின்றனர். பேருந்தினை பாதுகாப்பாக இயக்குவதில் 48 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அந்தவகையில் ஓட்டுநர்கள் சிறப்பாக மற்றும் பாதுகாப்பாக விபத்தின்றி செயல்பட புத்தாக்க பயிற்சி வருடம் முழுவதும் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது ஓட்டுநர்களுக்கு நினைவூட்டும் விதமாக, வாகனங்கள் ஓட்டும் விதம், ஓட்டுநரின் பொதுவான தவறுகள், அபாயகரமான நடத்தை மற்றும் அவற்றை நிர்வகித்தல், பாதுகாப்பான இயக்கம், எரிபொருள் சிக்கனம், உடல்நலம் மற்றும் மனநலம், தொழில்முறை இன்னல்கள் மற்றும் வாகன பராமரிப்பு பற்றி அறிந்துகொள்ளும் பொருட்டு இந்த தகவல்களை உள்ளடக்கி எளிதாக புரியும் வண்ணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் மற்றும் சாலை போக்குவரத்து நிறுவனம்  இணைந்து ‘‘ஓட்டுநர் கையேடு’’ வடிவமைக்கப்பட்டுள்ளது.


Tags : Minister ,Sivashankar ,Transport Corporation , Minister Sivashankar released the driver's manual for the benefit of members of the Transport Corporation
× RELATED அமைச்சர், எம்.பி. கூட்டணி கட்சி நிர்வாகிகளிடம் வாழ்த்து