சென்னை: பள்ளி மாணவரின் தாய்க்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிவசங்கர் பாபா மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டது. 2010ம் ஆண்டில் பாலியல் தொல்லை தந்ததாக கடந்த ஆண்டு சிவசங்கர் பாபா மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. பாலியல் தொல்லை தீவிர குற்றமாக இருந்தாலும், பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக புகார் அளிக்க தயங்குகின்றனர். 3 ஆண்டு தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றச்சாட்டின் கீழ் 10 ஆண்டுகள் தாமதமாக வழக்கு பதிவு செய்ததாக சிவசங்கர் பாபா தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.