×

நடிகை திவ்யாவை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் அர்ணவ் ஜாமீன் ரத்து

சென்னை: கர்ப்பிணியாக உள்ள நடிகை திவ்யாவை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் அர்ணவ் ஜாமீன் ரத்து செய்யப்பட்டது. நடிகர் அர்ணவ்-ன் ஜாமீன் மனுவை ரத்து செய்து அம்பத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சின்னத்திரை நடிகர் அர்ணவ் மற்றும் நடிகை திவ்யா இவர்களிடையே பல நாட்களாக மாறி மாறி குற்றசாட்டுகளை ம்முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை திவ்யா அளித்த புகாரின் அடிப்படையில் போரூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து படப்பிடிப்பில் இருந்த அர்ணவ்-ஐ கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து அர்ணவ் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி அம்பத்தூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை அம்பத்தூர் நீதிபதிகள் அமர்வுக்கு வந்த நிலையில் அர்ணவின் ஜாமீன் மனுவை நீதிபதிகள் ரத்து செய்து உத்தரவிட்டனர்.

நடிகை திவ்யா படப்பிடிப்பில் இருப்பதால் தனக்கு பிறக்கப்போகும் குழந்தையை கலைப்பதற்காக நாடகமாடுவதாக அர்ணவ் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டதாகவும், அப்பொழுது திவ்யாவின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் நடிகைக்கு நடந்த கொடுமைகளை எடுத்துரைத்தும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அர்ணவ் தாக்கமுற்பட்டபோது அவருக்கு ஏற்பட்ட காயங்கள் மற்றும் மருத்துவமனையில் வழங்கப்பட சான்றிதழ்களை சமர்ப்பித்துள்ளனர்.

அர்ணவ் பல பெண்களை ஏமாற்றியது குறித்து தகவல் வெளியான நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்ற வாதத்தையும் முன்வைத்ததன் அடிப்படையில் நடிகர் அர்ணவ்க்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.


Tags : Arnav ,Divya , Actor Arnav, who was arrested in the case of assaulting actress Divya, got his bail cancelled
× RELATED திருமணிமாடக் கோயில் நாராயணன்