சென்னை: சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தடையை மீறி தர்ணாவில் ஈடுபட்டு கைதான இபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவினர் உண்ணாவிரதம் நடத்தி வருகின்றனர். பகல் உணவைத் தவிர்த்து சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில், இபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு, சட்டமன்றத்தில் அதிமுகவிற்கு நீதி வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.