சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரம் தொடர்பாக வேதாந்தா நிறுவனத்துக்கும், முந்தைய ஆட்சியாளர்களுக்கும் என்ன தொடர்பு என்பதை விசாரிக்க வேண்டும் என விசிக எம்.எல்.ஏ. சிந்தனைச்செல்வன் வலியுறுத்தியுள்ளார். சிபிஐ விசாரணையில் இருந்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை திரும்ப பெற்று சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.