சென்னை: கல்வி நிறுவனங்களில் நிகழும் இயற்கைக்கு மாறான மரணங்களை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்ற உத்தரவு மாற்றியமைக்கப்பட்டது. இனி கல்வி நிலையங்களில் நிகழும் மரணங்கள் குறித்து சம்பந்தப்பட்ட போலீசாரே விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கல்வித்துறை விசாரணைக்கு பின்னரே கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உத்தரவை நீதிபதி சதீஷ்குமார் மாற்றியமைத்தார்.