×

பாஜ பிரமுகர் கார் எரிப்பு வழக்கு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் எஸ்டிபிஐ நிர்வாகி கைது

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம்பட்டி எஸ்ஆர்டி நகரை சேர்ந்த பாஜ பிரமுகர் சிவசேகருக்கு சொந்தமான கார் தீ வைத்து எரிக்கப்பட்டது. இவ்வழக்கில் பிஎப்ஐ மற்றும் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் புஞ்சை புளியம்பட்டியை சேர்ந்த பவானிசாகர் தொகுதி எஸ்டிபிஐ கட்சி துணைத்தலைவர் அமானுல்லாவும் ஒருவர்.

இவரை நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலும், குந்தகம் விளைவிக்கும் வகையிலும் நடந்து கொண்டதாக கூறி தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய ஈரோடு எஸ்பி சசி மோகன் பரிந்துரைத்தார். அதன்பேரில், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அமானுல்லாவை கைது செய்ய ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டார்.


Tags : STBI ,BJP , STBI official arrested under National Security Act in case of burning car of BJP leader
× RELATED மோடி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கமிஷனரிடம் புகார்