மதுரை: ஆதீன மடத்துக்கு சொந்தமான சொத்துக்கள் எவ்வாறு தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. ஆதீன மடங்கள், மாடங்களாக செயல்படுகிறதா? இல்லை வியாபார நிறுவனங்களாக செயல்படுகிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். ஆதீன மடங்கள் அனைத்துமே இந்துசமய அறநிலையத்துறைக்கு கட்டுப்பட்டவை என நீதிபதிகள் மாகாதேவன், சத்திய நாராயண பிரசாத் கூறியுள்ளனர்.