×

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்: அமைச்சர் சா.மு.நாசர் பங்கேற்பு

கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் தச்சூர் கூட்டு சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏவுமான டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்றது. சோழவரம் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வசேகரன் வரவேற்று பேசினார். இதில் சிறப்பு அழைப்பாளராக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் கலந்துகொண்டு  உரையாற்றினார். அமைச்சர் பேசும்போது, ‘’வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றிப்பெற தொண்டர்கள் அயராமல் உழைக்க வேண்டும்.

கடந்த காலங்களில் எப்படி கலைஞர், நாட்டின் பிரதமரையும் ஜனாதிபதியும் தேர்வு செய்தாரோ அதேபோன்று  முதல்வர் மு.க.ஸ்டாலினும் யாரை அடையாளம் காட்டுகிறாரோ அவர்தான் இந்த நாட்டின் பிரதமராகவும் குடியரசுத் தலைவராகவும் வரவேண்டும். அதற்கு நாமெல்லாம் அவருடைய கரத்தை வலுப்படுத்த வேண்டும்’ என்றார். கூட்டத்தில், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் மு.பகலவன், கே.வி.ஜி உமாமகேஷ்வரி, கதிரவன், எம்.எல்.ரவி, ராகவரெட்டிமேடு ரமேஷ், முன்னாள் மாவட்ட செயலாளர் சிவாஜி, தகவல் தொழில்நுட்ப அணி மாநில இணை செயலாளர் சி.எச்.சேகர், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெ.மூர்த்தி,

பொதுக்குழு உறுப்பினர் பா.செ.குணசேகரன், சுப்பிரமணியன், வெங்கடாஜலபதி, டாக்டர் பரிமளம், ஒன்றிய செயலாளர்கள் மு.மணிபாலன், கி.வே.ஆனந்தகுமார், ந. பரிமளம், சுகுமாறன், ரமேஷ்ராஜ், ஜெகதீஷ் சக்திவேல், சந்திரசேகர், பேரூர் செயலாளர்கள் அறிவழகன், முத்து, அபிராமி குமரவேலு, தமிழ்உதயன், நிர்வாகிகள் உதயசூரியன், வெற்றி, முரளிதரன், லோகேஷ், மோகன் பாபு, ஆனந்தகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். சோழவரம் ஒன்றிய குழு தலைவர் ராஜாத்தி செல்வசேகரன் நன்றி கூறினார்.

Tags : Thiruvallur East ,District ,DMK ,General Members Meeting ,Minister ,S.M. Nasser , Thiruvallur East District DMK General Members Meeting: Minister S.M. Nasser Participation
× RELATED ஜனாதிபதியை அவமதிக்கும் ஒரே கட்சி பாஜ-அந்தியூர் செல்வராஜ் எம்.பி. பேச்சு