ஜெ.வுக்கு ஆஞ்சியோ, இதய அறுவை சிகிச்சை செய்யவிடாமல் சசிகலா மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட்டதாக ஆறுமுகசாமி ஆணையம் சந்தேகம் தெரிவித்துள்ளது. ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு சிகிச்சைக்கு அழைத்து செல்லாமல் தடுப்பதற்கான சசிகலா, அப்பல்லோ மருத்துவமனையின் சதிக்கு விஜயபாஸ்கர் உடந்தையாக இருந்துள்ளார். சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தும் ஜெ.வை சிகிச்சைக்கு வெளிநாட்டுக்கு அழைத்து செல்ல விஜயபாஸ்கர் முயற்சி எடுக்காதது வியப்பு அளிக்கிறது என்று ஆணையம் தெரிவித்துள்ளது.