×

ஓபிஎஸ்சிடம் வெறும் 4 பேர் தான் உள்ளனர்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று அளித்த பேட்டி: பத்திரிகையாளர்கள் தான் ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பு என்று போடுகிறீர்கள். ஓபிஎஸ்சிடம் 4 பேர் தான் உள்ளார்கள். இபிஎஸ் தலைமையில் இன்றைக்கு அதிமுக செயல்பட்டு வருகிறது. 4 பேர் இருப்பது கட்சியா? இன்றைக்கு ஒன்றரை கோடி பேர் ஒன்றாக இருக்கிறோம். மாவட்ட செயலாளர்கள் ஒன்றாக இருக்கிறோம். பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட எல்லோரும் ஒன்றாக இருக்கும் போது கட்சி நாங்கள்தான். ஓ.பன்னீர்செல்வம் அந்த 4 பேருக்காக ஒற்றுமையாகச் செயல்படுவோம்  என்று சொல்லி வருகிறார்.

அந்த நாலு பேரும் போகக்கூடாது என்று கூறி  வருகிறார். பேரவை தலைவர் எப்படி  கடைபிடிக்கவேண்டும் என்று  விதி இருக்கிறது. மரபு இருக்கின்றது. அதில்  மாண்புகள் இருக்கின்றது. விதிகளை கடைபிடிப்பதுதான் நல்ல பேரவைத்  தலைவருக்கு அழகு. அவரை பொறுத்தவரையில் நாளை (இன்று) தெரிவிப்பதாக  தெரிவித்துள்ளார். அவர் சொல்வதைப் பொறுத்து எங்களுடைய சட்டமன்ற  கழக  குழுவின் நடவடிக்கைகள் இருக்கும். பேரவையில் கலந்து கொள்வதா இல்லையா  என்பதை இன்றைக்கு தான் சொல்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : OPSC ,minister ,Jayakumar , OPSC has only 4 people: Interview with former minister Jayakumar
× RELATED அதிக அளவில் மக்களை வாக்களிக்க வைக்க...