சென்னை: 100 ஒன்றிய அமைச்சர்கள் கூட தமிழகத்திற்கு வரட்டும்; மாநில உரிமைகளில் தலையிட்டால் கண்டிப்பாக எதிர்ப்போம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற கோட்பாட்டை பின்பற்றி வருகிறோம். மாநில அரசின் உரிமைகளில் தலையிடுவதாக இருந்தால் அதை அதிமுக கண்டிப்பாக எதிர்க்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.