×

சென்னை பெண் மருத்துவர் உள்பட பல பெண்களை காதலிப்பது போல நடித்து மிரட்டி பணம் பறித்த வழக்கில் காசியின் கூட்டாளிக்கு அக்.28 வரை சிறை: நாகர்கோவில் மகளிர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு

நாகர்கோவில்: நாகர்கோவில் காசியின் கூட்டாளி கனகபுரத்தை சேர்ந்த கவுதமுக்கு அக்.28 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு அளித்துள்ளனர். கவுதமை அக்.28 வரை சிறையில் அடைக்க நாகர்கோவில் மகளிர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு அளித்துள்ளார். சென்னை பெண் மருத்துவர் உள்பட பல பெண்களை காதலிப்பது போல நடித்து மிரட்டி பணம் பறித்தவர் காசி.

சென்னை பெண்களை காதலிப்பதுபோல ஏமாற்றி, ஆபாச படம் எடுத்து மிரட்டியதாக கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட காசியின் கூட்டாளியை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். காசி மற்றும் ஜீனோ கைதான நிலையில் மற்றொரு கூட்டாளியான கவுதம் குவைத் சென்று விட்டார். இதனால் அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டிஸ் கொடுக்கப்பட்டதோடு விசாரணை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றம் செய்யப்பட்டது.

குவைத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு வந்த கவுதமை விமான நிலையத்தில் வைத்து சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். பின்னர் நாகர்கோவில் சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வந்து கவுதமிடம் விசாரித்து வந்தனர்

இந்திலையில் நாகர்கோவில் காசியின் கூட்டாளி கனகபுரத்தை சேர்ந்த கவுதமுக்கு அக்.28 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு அளித்துள்ளனர். கவுதம் அக்.28 வரை சிறையில் அடைக்க நாகர்கோவில் மகளிர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு அளித்துள்ளார்


Tags : Khasi ,Chennai ,Court ,Nagargo , Nagercoil Women's Court Judge orders Khasi's accomplice to be jailed till October 28 in the case of extorting money by pretending to be in love with several women, including a Chennai female doctor.
× RELATED சிதம்பரம் கோவிலில் பொது தீட்சிதர்கள்...