×

பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க அரசுக்கு சசிகலா வலியுறுத்தல்

சென்னை: சென்னையில் மாணவி சத்யா கொலை செய்யப்பட்டது மனிதாபிமானமற்ற செயல். விழிப்புடன் இருந்து பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்திட வேண்டும் என சசிகலா வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்: சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி சத்யாவை தள்ளிவிட்டு கொலை செய்துள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசு பெண்களுக்கு உரிய பாதுகாப்பினை அளித்து, தமிழகத்தில் இதுபோன்ற உயிரிழப்புகள் இனி எங்கும் ஏற்படாதவாறு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


Tags : Sasigala , Sasikala urges the government to protect women
× RELATED கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு; கோவை...