பெரம்பூர்: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதையொட்டி தீயணைப்பு வீரர்கள் சார்பில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, வியாசர்பாடி தீயணைப்பு வீரர்கள் சார்பில், வியாசர்பாடி பி.வி.காலனி 9வது தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு ஒத்திகை நடத்தப்பட்டது. தீயணைப்பு நிலைய அதிகாரி செல்வம் தலைமை வகித்தார். மூத்த தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதில், வீடுகளை மழைநீர் சூழ்ந்தால் அதிலிருந்து எவ்வாறு வெளியே வருவது, ரப்பர் படகுகளை எவ்வாறு பயன்படுத்துவது, நோய் தடுப்பு சாதனங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. வெள்ள தடுப்பு சாதனங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்றும் தீயணைப்பு வீரர்கள் பயிற்சி அளித்தனர்.