சென்னை: ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி விநியோகிக்கப்படுவதாக ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளது வருத்தம் தருகிறது. அரிசியின் தரம் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் அதிகாரிகளை கேட்டிருக்கலாம், ஆனால் பாஜகவினர் கூறியதையே ஒன்றிய அமைச்சரும் கூறியுள்ளார். பாஜகவினர் எப்போதுமே உண்மைக்கு புறம்பான குற்றசாட்டுகளை கூறி வருகின்றனர் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துளளார்.