சென்னை: சென்னை வந்த தங்கக் கடத்தல்காரர் சுங்க சோதனையில் இருந்து தப்ப உதவிய ஏர் இந்தியா ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். துபாயில் இருந்து சென்னை வந்த பயணி ஒருவர் தங்கத்தைக் கடத்த ஏர் இந்தியா ஊழியர் உதவியதாக புகார் தெரிவிக்கப்பட்டது. சந்தேகத்தின் பேரில் அவரை பிடித்து சுங்க அதிகாரிகள் சோதனை செய்ததில் தங்கப்பசை இருந்த கைப்பை சிக்கியது.