×

ஓபிஎஸ்சின் பண்ணை வீட்டில் டிவி திருட்டு

பெரியகுளம்: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கைலாசபட்டி பகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீடு உள்ளது.  இந்த வீட்டின் கீழ் உள்ள இரு அறைகளில் ஒன்று ஓபிஎஸ்  பார்வையாளர்களை சந்திப்பதற்கும், மற்றொன்று முக்கிய நபர்களை சந்திப்பதற்குமாக உள்ளது. வீட்டின் மாடியில் ஓபிஎஸ் ஓய்வு அறை தனியாக உள்ளது. நேற்று முன்தினம் இரவு வீட்டின் பின்புறம் உள்ள சுவரின் வழியாக ஏறி குதித்த மர்ம நபர்கள், மாடியில் உள்ள ஓய்வு அறையின் கதவை உடைத்து அங்கிருந்த 54 இன்ச் டிவியை தூக்கி சென்றுள்ளனர்.

வழக்கம்போல் நேற்று பாதுகாவலர்கள் மாடிக்கு சென்றபோது, கதவு உடைக்கப்பட்டு டிவி திருடப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரில், பெரியகுளம் தென்கரை போலீசார் வழக்குப்பதிந்து, கைரேகை நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்தனர். மேலும், தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் ெபரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : OPS' , TV stolen from OPS' farmhouse
× RELATED ஒரிஜினலை ரவுண்டு கட்டும் டூப்ளிக்கேட்டுகள்: ‘OPS’களின் அட்ராசிட்டி